காதுகளில் கிசுகிசுத்தது சிலிர்த்தது
நீயும் என்னை "காதலிக்கிறாய் "
எனும் வார்த்தையினை
விழிகளின் வழியாய்
உணர்த்தியபோதும் !
மௌனத்தின் வழியாய்
உணர்த்தியபோதும் !
குறுஞ்செய்தி வழியாய்
அனுப்பியபோதும் !
இதயம் இதமாய் தான்
உணர்ந்தது !
என்னை அனைத்துக்கொண்டே
என் செவிகளில்
"நான் உன்னை காதலிக்கிறேன் "
என கிசுகிசுத்தபோது
இதயம் சிலிர்த்தது !