அணைத்திடு
காதலியே..!
முத்துப்பல் என்பார்கள்..
நான் நம்பவில்லை..
உன்னைக் காணும்வரை...!
கண்ணில் மின்னல்..
சுண்டி இழுத்தபின்..
எனக்கோ இன்னல்...
உதட்டில் தேன்
வழியவில்லை...
வார்த்தைகள் வண்ணம்பூசி..
என்னை வழியச்செய்கிறது...
படபடக்குது இதயம்
உன்னைப் பார்த்து...
பரிதவிக்கிறேன்
என்னைப் பார்த்து...
பனங்காட்டு நரியும்
பட்டாம்பூச்சியானது உன் பார்வையால்...!
உன் கன்னத்தில்
விழும் குழி..
அழகல்ல..
அபாயமானது...
கன்னக்குழியாக தெரியவில்லை..
கவர்ந்திழுத்த மரணக்குழியாக...
என்னை மடியச்செய்து விட்டது
உன் காதலால்...!
அரைவேக்காடாய்..
அரைகுறையாய்..
அரைபைத்தியமாய்..
அலைந்து கொண்டிருக்கின்றேன்...!
அருமையானவளே..!
அணைத்துவிடு காதல் சுடரை...
அல்லது
அழித்துவிடு காதல் உடலை...
****************
சிகுவரா
ஜூன் 2004