முகில் மழை அவள்
நீல வானில் சூழ்ந்த முகில்
பொழிய மறந்து தயங்கி நின்றது
உன் கருங் கூந்தலைப் பார்த்து ...!!!
இடையே ஒரு மின்னல் கீற்று தோன்றியது
வானிடையேயா உன்னிதழிடையேயா ?
நானறியேன் !
தயங்கி நின்ற முகில் பொழிந்த போது
நனைந்தது நீ குளிர்ந்து மழை !
------கவின் சாரலன்