என்னோடு நீ வா
எந்தன் மனமுன்னைப் பாராமல் வாடுதடா
உந்தன் வரவை எதிர்பார்த்து ஏங்குதடா
உன்னைப் பிரிந்து என்மனம் வேகுதடா
கண்ட கனவுகள் காற்றோடு போகுதடா
பிரிந்தது போதுமடா என்னோடு வந்துவிடு
இரவெது பகலெது என்று தெரியாமல்
சேர்ந்தே இருப்போம்; கையோடு கைகள்
கோர்த்து உலகை முழுவதும் சுற்றுவோம்
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்