இனியவளே
பகலிலும் நிலவாய் வருகிறாய் - என்
பார்வையில் இருந்து விலகாமல் இருக்கிறாய்
என்றும் அணையா சோதியாய் எரிகிறாய்
என் வாழ்விலும் விளக்கேற்றி வைக்கிறாய்
இனிய குரலால் மயங்க வைக்கிறாய்
இசை அமுதை அள்ளிக் கொடுக்கிறாய்
இதழோரம் இன்பம் தருகிறாய் - என்
இதயம் எங்கும் நிறைகிறாய் இனியவளே
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்