என்னை பிடித்தவள்
அடம்பிடித்தவள்
ஆணவம் பிடித்தவள்
திமிர் பிடித்தவள்
என்று எத்தனையோ முறை
உன்னை திட்டி இருக்கிறேன்
அப்பொழுதெல்லாம்
மௌனம் மட்டுமே
பதிலாய் தந்தாய் !
என்னைப்பிடித்தவள்
என் காதலை பிடித்தவள்
என் கவிதையை பிடித்தவள்
என் இதயத்தை பிடித்தவள்
என்று இப்பொழுது வர்ணிக்கிறேன்
இப்பொழுதும் மௌனத்தையே
பதிலாக தருகிறாய்
புன்சிரிப்போடு !