😢முதியோர் இல்லத்தில் நான் 😢

***முதியோர் இல்லத்தில் நான்***


உன்னை சுமந்த பத்து மாதத்தில் ஒரு கணம் கூட பாரமாய் இருந்ததில்லை!
ஆனால் இப்போது ஒவ்வொரு கணமும் பாரமாய் இருக்கின்றது!!!
என் கண்கள் வாசலையே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது -
என்றாவது ஒருநாள் என்னை திரும்ப அழைத்து செல்வாய் என்று!!
எனினும் மறவாதே- என் செல்வமகனே !!
உனக்கும் ஒருநாள் முதுமை காத்திருக்கிறது என்று!!!!

எழுதியவர் : கவிதை ரசிகை (29-May-17, 12:37 pm)
சேர்த்தது : ஹரிணி
பார்வை : 346

மேலே