அவ்விழி - வினோதன்

அவ்விழி

சொர்க்கத்தை
சுற்றி காண்பித்தது...

விழி நாக்கிற்கு
அமிர்தம் அருளியது ...

பரவச பூக்களை
என்வசம் ஆக்கியது...

நறுமனக் குன்றுகளை
நாசியில் நட்டது...

பானக்க கடல்களை
இதழோரம் சிந்தியது...

இசைக் கடலில்
இழுத்து வந்து எறிந்தது...

புலன்களை சுற்றிலும்
மழை மேகம்...

மன வானிலை
மண்வாசம் பூண்டது...

இமைத்து விடாதே
இமையின் கட்டளை

துடித்து விடாதே
இதயக் கட்டளை

சிந்தனை முறி
மூளையின் கட்டளை

நாசி மதகு
தானாக மூடியது

செவி சவ்வுகள்
உண்ணா விரதம்

யுகங்கள் கடந்தும்
அவ்விழியை அச்சாக்கி
சுழலத் தொடக்கியது
என் இணையுலகம் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (29-May-17, 2:00 pm)
பார்வை : 63

மேலே