சித்திரை முதல் தை வரை

சித்திரையில் வாழ்த்தினேன்
நிலாவென சிரித்தாள்
வைகாசியில் வாழ்த்தினேன்
வைகையெனப் பெருகி வந்தாள்
ஆனியில் வாழ்த்தினேன்
தேன் கனியாய்ச் சிவந்தாள்
ஆவணியில் வாழ்த்தினேன்
தாவணியில் கோலம் போட்டாள்
மார்கழியில் வாழ்த்தினேன்
மௌனமாய் விழி அசைத்தாள்
தையில் வாழ்த்திய போது நிறுத்தினாள்
கைபிடித்தாள் பெரியோர் வாழ்த்து பெறுவோம் என்றாள் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-17, 3:37 pm)
பார்வை : 73

மேலே