கள்ளமில்லா மனம் காதல் தந்தது

உன் பேரழகால் என்
சிந்தை மயங்கியது
உண்மை என்றாலும்
என் கண்ணே உன்மீது
நான் காதல் கொண்டது
உன்னோடு பழகியபோது
உன் கள்ளமில்லா உள்ளம்
கண்டுகொண்ட பின்னே தான்
என் உள்ளமதை கொள்ளை
கொண்ட உன் உள்ளம் என்
காதல் இருப்பிடம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-May-17, 4:24 pm)
பார்வை : 579

மேலே