கண்ணீரில் கரையும் காதல் வலிகள் 555

நிலவே...

என் வீட்டு வாசலில்
வாழைமரம் வைத்து...

உன் வீட்டு வாசலில் கோலமிட்டு
புது பெண்ணாக நீ இருக்க...

காதலித்த உன்னைவிட்டு
வேறொருத்தியை மணம் முடித்த...

வேதனையை நினைத்து நித்தம்
நித்தம் விம்மி விம்மி அழுகின்றாயோ...

அவளோடு நான் வரும் நேரம்
உன் விழிகளில் ஏனடி ஈரம்...

சொல்லாமலே காதலை
உன் நெஞ்சில் சுமந்தாயோ...

என்னைப்போல் நீயும்
காதல் கொண்டாயோ...

நீ வாய்விட்டு என்னிடம்
சொல்லி இருந்தால்...

உன்னிடம் சொல்லி
இருப்பேனடி நான்...

ஏதேனும் உனக்கு
ஒரு பதில் அழகே...

பொழியாமல் இருக்கும் மேகத்தால்
யாருக்கும் பயன் இல்லை...

சொல்லாத காதலும்
அப்படிதான்...

உன் கண்ணீரில் வலிகளை
கரைத்துவிடு முடிந்தால்...

புதுப்பெண்ணாக புன்னகை
பூ கொடடி இனியேனும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணிநிலவே. (30-May-17, 7:22 pm)
பார்வை : 1058

மேலே