கண்ணீரில்

அன்பே
மூடப்பட்ட உன் வாழ்க்கை சிறையில்
திறந்த உன் மனச்சிறையை
எண்ணி மலரத் தொடங்கியது!
மலராமல் இருந்த என் இதயம்!!,

தேவதையாக உன்னை
கண்ட நாள்முதல்
என் காலங்கள் எல்லாம்
உன் கண்களை கண்டே கழிந்தது,

என்றேனும் நீ தரும்
ஒற்றைப் பார்வையில்
ஓயாமல் என்னையும் மறந்து நின்றேன்!
என்னை அறியாமல்,

நீயின்றி நான் வாழும் நாட்களில்
நீங்காமல் என்னை மட்டுமே
சேர்ந்து நின்றது உன் நினைவுகள்,

உல்லாசம் என்பதை இதுவரை
இருவரும் கண்டதில்லை!
இருந்தும் உள்ளங்கள் ஒன்றை ஒன்று
கண்டதடி நம்மிடத்தில்,

விதி என்னும் சிறை கதவு
திறந்த வேளையில்
மூடப்பட்டதடி உன் வீட்டுச்சிறை,

தனி அறையில் நீ தத்தளிக்க
என் விழியெல்லாம் நீந்துகின்றதடி
கண்ணீரில்...
...............................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (31-May-17, 7:15 pm)
Tanglish : kanneeril
பார்வை : 413

மேலே