என் வாழ்வில் நீ மட்டும் போதுமடி
காற்றில் அசைந்த உன் கார்கூந்தல் -என்
கருந்தேகம் தீண்டியதடி !
ஜில்லென்ற தென்றல் இப்படித்தான்
தீண்டுமோ !
இரு விழிகளின் ஒற்றைப்பார்வையில்
இதயம்தான் இன்னலுக்கு ஆளாகுதடி !
இதயம் வாழ்பவளின் பார்வை ஆதலால்
இப்படித்தான் இதயம் நோகுமோ !
ஒற்றைக்கவிதை எழுதி முடித்தவுடன்
ஒன்று மட்டுமே போதுமா என தோணுதடி !
இரட்டைக்கவிதை எழுத எனக்கு பிடிக்கும்
என்றால்..இப்படி நீ முறைப்பது தகுமோ !
இதழ் வரிகளை விரல்களால் எண்ணிப்பார்க்க
தோணுதடி !
இனி என் வாழ்வில் என்றுமே நீ மட்டுமே
போதுமடி !