நீயற்ற நான் - ஆன்ஸ் ராஜ்

நீ இல்லா என் இரவு
நிலவில்லா அமாவாசை.
நீரில்லா மேகமாய்
நீயற்ற நான்.

தினம் வரும் விண்மீனும்
திறந்த வெளியில் இன்றில்லை.
திங்களும் முகிலின்றி
திகைத்து நிற்கிறது.

என் சொல்லில் நயமில்லை,
எழுத்தில் உண்மையில்லை,
நீயற்ற நானாய் இவ்விரவு
நீள்கிறது உன் நினைவுகள் தாலாட்ட!

எழுதியவர் : பபியோலா (1-Jun-17, 6:30 pm)
சேர்த்தது : பபியோலா ஆன்ஸ்.சே
பார்வை : 223

மேலே