கவிக்கோ நீவிர் மறையவில்லை கவிதையாய் வாழ்கிறீர்
கவிதை மனிதனை
ஒழுங்கானவனாக்குகிறது ;
அழகனாக்குகிறது
அழகே இறைவன்
இறைவனே அழகு
கவிதை
அழகை ஆராதிக்கிறது
அதாவது
ஆண்டவனை ஆராதிக்கிறது .
கவிக்கோ -அப்துல் ரகுமான் .
மதுரை பெற்றெடுத்த மா கவிஞரே !
பால் வீதி வழியாய் வலம் வந்தீர் !
நேயர் விருப்பமாய் நெஞ்சில் நின்றீர் !
கவிதை பித்தரே !
முத்தமிழின் முகவரியே !
நிலவில் இருந்து வந்தவரே !
கவிதையை ஆராதித்தவரே !
ஆலாபனை படைத்த அழகனே !
கவிக்கோ .உம்மை இழந்தோம்
இதயம் உடைந்தோம் !
எல்லாம் வல்ல இறைவன்
உம்மை அழைத்தான்
எம்மை விட்டு சென்று விட்டீர்
கவிக்கோ உமது ஆத்மா
சாந்தி அடைய வேண்டுகிறேன்