பெண்ணும் ஆணும்

மலைகளின் செறிவில் இருந்து
பெற்ற வீரம் ஆண் எனில்
மலைகளையும் பாசத்தினால் கட்டிய நீர்வீழ்ச்சி
மல்லிகை மனம் பொருந்தியவள் பெண்
பெண்ணும் ஆணும் உடம்பில் சமமில்லை
ஆனால் உள்ளத்தால் சமம்தான்
பெண்ணிற்கென்று ஒரு சுதந்திர உலகம் உண்டு
ஆணுக்கென்று ஒரு சுதந்திர உலகம் உண்டு
ஆணின் சுதந்திரத்தை பாதிக்காத பெண்ணும்
பெண்ணின் சுதந்திரத்தை பாதிக்காத ஆணும்
என்றும் சமமே இந்த உலகில்......
பெண்ணை சமாக நினைக்க வேண்டும் என்றால்
ஆணுக்குள் பெண்மை மலர வேண்டும்
உள்ளத்தால் மட்டுமே சமத்துவம் மலரும்
சமத்துவம் மலர்ந்தால் பெண்மையும் கவுரப்படும்!!!
பெண் கொடுமையும் தடைபடும்!.
இனி வரும் தலைமுறைக்கு போதியுங்கள்
பெண்மையில் மீதியே ஆண்மை என்று
ஆண் என்றும் பெண்ணின் மறுபிறவி என்று
ஆணும், பெண்ணுக்கும் உணர்ச்சிகள் ஒன்றென்று
அ என்ற குறில் இருந்துதான்
ஆ என்ற நெடில் தோன்றியது என்று
பெண்ணை மதித்து சமமாக பார்த்து
மலரட்டும் அடுத்த தலைமுறை

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (3-Jun-17, 5:16 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : pennum aanum
பார்வை : 1043

மேலே