பயணம்

தாராவிற்கு வளைகாப்பு முடிந்து அவளை அழைத்துக்கொண்டு சென்றனர் மாணிக்கம் தம்பதியினர். அவள் மனதில் அப்பா நிம்மதி என்று நினைத்தாள் ஆனால் நானாவும் கூட வந்தான். ஐயோ என்று இருந்தது அவளுக்கு.

இரண்டு நாட்கள் மட்டுமே கூட இருந்தாலும் இரண்டு வருடம் போல் இருந்தது தாராவிற்கு. அந்த நாட்களில் அவன் வாக்கிங் வருகிறேன் என்று வழி முழுதும் அவளிடம் அவன் ஊரில் நடந்ததை கூற கூடாது என்று மிரட்டி வந்தான். அவளுக்கும் வேறு வழி இல்லாமல் சரி சொன்னாள்.


மகப்பேறு காலம் நெருங்க நெருங்க அவளுக்கு திரும்பி புக்ககம் செல்வதை நினைத்து இப்படியே இறந்துவிட கூடாத என்று நினைத்தாள். பெண் குழந்தை பிறந்தது ஆனால் அவளுக்கு துளியும் சந்தோசம் இல்லை தான் பெற்றதை இதுவும் அனுபவிக்கனும் என்ற நினைத்தாள்.

திரும்பி கணவனின் ஊருக்கு சென்றாள் மாமனாரின் தொல்லைகள் அதிகம் தான் ஆனது சிறுது குறையவில்லை மேலும் குழந்தைக்கு பால் கொடுக்கமுடியாமல் தவித்தாள் மாமனார் வேண்டும் என்றே அருகில் வந்து கண் கொட்டாமல் பார்க்க ஆரம்பித்துவிடுவார் இவளால் மடியில் குழந்தையுடன் எழுந்து கொள்ள முடியாது என்பதை அறிந்து வேண்டும் என்றே அதை செய்வார்.

பாவம் குழந்தை அதற்க்கு பசியாற முடியாமல் போய்விடும். இவள் பாத்ரூமில் பொய் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டி இருக்கும். கணவனிடம் கூறினால் ஏன் என் அப்பாவின் முன் பால் கொடுத்தால் தான் என்ன என்று கேட்பான். நான் வேலைக்கு போக வில்லை நமக்கு சாப்பாடு அவர் தான் போடுகிறார் நீ தான் கொஞ்சம் அவரை அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டும் என்று கூற அவளுக்கு இப்பொழுதே அவனையும் அவன் அப்பாவையும் கொன்று போட்டால் தான் என்ன என்று தோன்றும். கோபத்துடன் அவனை பார்த்தால் என்ன முறைக்கிற நான் சொல்வதை கேட்டு நடந்தால் உனக்கு நல்லது அவ்வளவுதான்.

தாரா முடியாது என்று சொல்ல அவன் தாராவை அடித்து துன்புறுத்தினான் . நீ எவ்வளவு அடித்தாலும் நான் இதற்க்கு ஒப்புக்கொள்ள மாட்டேன். இவளை விட்டுத்தான் புடிக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு சென்றான்.


அவளும் அவள் குழந்தையும் தப்பிக்கும் இவர்களிடம் இருந்து ......

எழுதியவர் : (3-Jun-17, 9:17 pm)
சேர்த்தது : தரு தமிழச்சி
Tanglish : payanam
பார்வை : 389

மேலே