பட்டாடை எரிவதேன்

வேத வேள்விகளில்
பட்டு பீதாம்பரம்
' அவிசாக' நெய்யுடன்
வேள்வி தீயில்
சாம்பலாவது கண்டுள்ளேன்
இன்று இயற்கையாய்
எரியும் அடுக்குமாடி
ஜவுளி கடைகளில்
கோடான கோடி
பட்டு ஆடைகள்
சாம்பலாவது ஏனோ
பட்டையே தவிர்த்து விடு
என்று இறைவன் நினைக்கிறானோ
யார் அறிவார் ?
பட்டாடை தவிர்த்து விட்டு
பருத்தி ஆடைக்கு போய்விடலாம்
வாருங்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jun-17, 3:49 pm)
பார்வை : 284

மேலே