காதல் , ஊடல்

ஊடல், வலி
********
மனதின் வேதனைகளை
உறக்கச்சொல்லும் அந்த நாளில்
உன் மாடி மீது -
நான் முகம் புதைப்பேன்...

அப்போது உணர்வாய்
உன்னை நான் புரிந்து கொண்ட நீளம்பற்றி
வார்த்தைகள் தடுக்கி விழும்
தருணத்தில் மனிதன் -
அவனை மறந்து போகிறான்
அதனை மற்றவர்
புரிந்து கொள்ளும் விதம்தான்
நீ சொன்ன வார்த்தை....
" புரிந்துகொள்ளாமை "

காதலை சுமந்த காதலியின்
காத்திருப்பின் தவிப்பை
உணர்ந்தே ஒவ்வொரு இரவும்
பேசத்துடிக்கும் என் இதயம்..

இந்த இரவு
உன்னோடு பேசிய இரவுதான்,
இருப்பிரும்
என் உறக்கம் கொன்று புதைத்த இரவு அது...

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (4-Jun-17, 4:06 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 148

மேலே