நன்றி சொல்ல என் ஆயுள்

உனக்கு
நன்றி சொல்லி
வாழ
என் ஆயுள் போதாதே.....
என்
ஆவி போகும்வரை
எந்நாளும்
நன்றி சொல்லிச்
சொல்லியே
என்னுயிரும்
பிரியும்......!!

பிரியமானவளே
உயிர் என்னைப்
பிரியும் வரை
என்பிரியம்
உன்மேல்
குறையாது......
திரை விழுந்த
நாடகமேடையில்
சிறைப்பட்டுக்
கிடக்கிறேன்.....!!

என்னில் மீதி
நீ என.....எண்ணியநாள்
முதல்.....
அன்னம் தண்ணியும்
அரைவாசிதான்
எனக்கு.....மனசு
நிறைஞ்சு
சுவாசமாய்
நீ மாறிய நாள்
முதலாய்.......!!

விழிகள் தொலைத்த
தூக்கம்
நமக்குள்
நாம் புதைத்த
ஏக்கங்கள்.....
எல்லாமே
நம்மோடு
மௌனித்துப்
போகட்டும்.....!!

அணு இன்றி
அசையாது
உலகு....உன்
அன்பின்றி
திசை ஏது
திக்குத்தான் எனக்கு
ஏது?

உன் விழிகளிக்கு
விழி
முத்தம்
விருந்து வைப்பேன்.....
என்
உள்ளத்து
வலிகளுக்கு
மருந்து
வைப்பேன்.....என்
வாழ்க்கை
எல்லாம்
உன்
வாழ்க்கைக்காக
வாழ்ந்து
ரசிப்பேன்.....!!

என் ஓவியமே
எந்தன்
வாழ்க்கையின்
காவியமே.....உன்னால்
தானடி
என்னுள்ளத்தில்
காயமே.......
மாயமந்திரம்
செய்யாதே......மாயவித்தையில்
மனசுக்கு
கசையடி
வைக்காதே.....!!

திக்குத்
தெரியாத
காட்டில்......
திக்கித்
திக்கி
வார்த்தைகள்
சேர்க்கிறேன்.....
என்னைத்
தாக்கிய
இளம் தென்றலை
தேடி......!!

உனக்குமட்டும்
அடிமையான
மனசு.....
உன்னை
இழந்து
புலம்பித்
தொலைக்குது......!!

கரைகின்ற
உந்தன்
கண்மைகள்
சொல்கிற
காரண
உண்மைகள்.....
காதலை
மட்டும்
சொல்லவில்லை
உனக்கு.....
தொலைந்து
போன
அழகான
வாழ்க்கையின்
தொலைந்த
இறுதி
நிமிஷ
சோகங்களையும்தான்......!!

எழுதியவர் : thampu (5-Jun-17, 1:28 am)
பார்வை : 1882

மேலே