கண்ணா நீயே

கீற்றினில் ஆடிடும் தென்னைமென் தென்றலில்
ஆற்றினில் ஓடிவரும் மெல்லிய நீரலையில்
ஊற்றினில் ஊறிவரும் நீரின் சுவையினில்
காற்றில் மிதந்து வரும்குழலி சையினில்
மாற்றிலா கண்ணாநீ யே !

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-17, 9:55 am)
பார்வை : 92

மேலே