சிறுமிளகும் வள்ளுவரும் ஒன்றெனச் சிலேடையில் - நேரிசை வெண்பாக்கள்

சிறுமிளகும் வள்ளுவரும் ஒன்றெனச் செப்ப
முறையாய்ச் சிலேடையில் முத்து - மறையாம்
திருக்குறளைப் பங்கமின்றித் தேர்ந்து,தான் போற்றிச்
சிரம்வைத்துச் செய்தார் சிறப்பு! 1

முத்து - வள்ளிமுத்து

உருவத்தால் அஃது சிறியதுகாண்; ஆனால்
பெரிதன்றோ முச்சுவையால் பேணும் - திருக்குறளும்
சங்ககாலம் தொட்டுக் கடல்கடந்த நம்மிளகும்
செங்கரும்பாய்ச் சேர்க்குஞ் சிறப்பு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-17, 1:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 273

மேலே