இம் முறையும் பறவையாகிறேன் நான்

நீ கிறுக்கும் வானத்தில்
இம் முறையும்
பறவையாகிறேன் நான்....

*****

கடைசி ஆணியை அடிக்கையிலாவது
ஒரு கல் கூட்டத்திலிருந்து
வந்திருக்கலாம்.....

*****


வீதி நிறைக்கும் என்னை
வழியெங்கும் சிந்துகிறது
பிணமான பூக்கள்...

*****

ஜடாமுடியில் வீதி சுற்றுபவன்
தலைக்குள்ளிருந்து கொட்டுகிறது
பைத்தியகார புழுக்கள்

*****

எதிர் எதிரே கடக்கையில்
நாமாகி விடுதலில் இருக்கிறது
கொஞ்சம் காதலும் கொஞ்சம் சாதலும்...

*****

யார் என்று கேட்டார்கள்
யாரோ என்றும் சொன்னார்கள்
வீடு வரை யாராவாக இருப்பதும் பிடிக்கிறது

*****

தவித்த வாய்க்கு நீர் இல்லவே
இல்லை எனும் வீடுகளை
வழிகளில் காண்கிறேன்
நா வறலும் முன்
மனம் வறண்டு விடுகிறது....

*****

கவிஜி

எழுதியவர் : கவிஜி (11-Jun-17, 10:26 am)
பார்வை : 119

மேலே