சமர்ப்பணமும், சாபமும்

ஆடம்பரமே உயர்வென்று போதிக்கும் விஷமத்தால் நிறைந்த பெரியோர்களே!
உங்களின் கூற்றும், கருத்தும் முற்றிலும் தவறென்பதால் அதை சிறிதும் ஏற்கமாட்டேன்...

இனவெறி, சாதிவெறி, மதவெறி, மொழிவெறி என்று பல வெறிச்செயல்களை பெருமை என்று போதிக்கும் உங்களுடைய தீய வார்த்தைகளுக்கு என்றும் செவி கொடுத்தும் கேட்கமாட்டேன்...

யான் சுதந்திரமானவனாக இருக்கவே விரும்புகிறேன் எனது மனச்சாட்சியின் வழியில்...
உங்களுடைய அறியாமை குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துங்கள் பெரியோர்களே...

உலகங்கள் யாவும் உண்மைப் பரம்பொருளின் அரசாட்சியே நடைபெற,
போலி அரசுகளே உங்களுடைய வேஷத்தை கலையுங்கள்...
பௌதிகத் தன்மையுள் அகப்பட்டாலும் நித்தியனாகிய உண்மைப் பேரன்பிடம் என்னை முழுமையாகச் சமர்ப்பிக்கிறேன்...

உயர்வு, தாழ்வென்று பங்குச் சந்தை சூதாட்டம் நடத்தும் நாடுகளெல்லாம் கெட்டொழியட்டும்...
மது விற்று நாட்டைக் காப்பாற்றும் அரசுகளெல்லாம் மடியட்டும்...
தீங்குதரும் பொருட்களை உற்பத்தி செய்யும் வியாபார நிறுவனங்களெல்லாம் தீக்கிரையாகட்டும்...
சகுனிகளால் வகுக்கப்பட்ட போர் தந்திரங்களும், அழிவைத் தரும் அறிவியலும் அழிந்து போகட்டும்...
உருவாக்கட்டும் மகா பிரளயம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Jun-17, 11:11 am)
பார்வை : 417

மேலே