தினமும் திகதிகள்

தினமும்
திகதிகள்
பார்க்கிறேன்.....நீ
வந்த
செய்தி மட்டும்
வரவில்லை
எனக்கு.....!!

வழிமேல்
விழிவைத்து
வலியை சுமந்து
நொந்துபோகிறேன்.....
உன் வருகையை
நினைத்து
நினைத்து......!!

தூரங்களால்
நாம்
சுமக்கும்
துயரங்கள்
கோடி......துன்பத்தில்
சாகிறேன்
மறுஜென்மத்தில்
வேண்டாம்.....இப்போதே
ஓடி வாடி......!!

சாவா வாழ்வா
என்பது
சாதனை
அல்ல....வாழ்நாளில்
நாம்
சுமக்கும்
வேதனை......!!

ஆறுதல்
சொல்ல
அன்பே
உன் வார்த்தைகள்
வேண்டும்.....
உன் அணைப்பில்
அணைந்துபோகும்
என்
வேதனைகள்
தானே......!!

எத்தனை
துன்பங்களை
இத்தனை
நாட்களாக
சுமந்திருப்போம்.....
போதும்
வந்துவிடு.....மோதும்
தனிமையால்
போர்களமாச்சு
வாழும்
நிமிஷங்கள்......!!

அன்பே
உன்னைக்காணாமல்
என்னைத்
தொலைக்கிறேன்......
தொலைவில்
நீ.....
தொலைவதாக
நான்......!!

உன்னை மறந்து
ஒருநாளும்
என்னைக்கடப்பதில்லை.....
உன்னைச்
சேராமல்
என்னைத் தீயில்
கரைப்பதுமில்லை.....!!

எழுதியவர் : thampu (11-Jun-17, 11:52 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 133

மேலே