ஊமை மலர்கள் --- முஹம்மத் ஸர்பான்

பூபாளக் கருவறையில்
நேபாளப் புஷ்பங்கள்
பாலைவன தூதுவர்கள்..,
சிரியாவின் மார்பகத்தை
முட்களின் கல்லறையாய்
யுகப்பூக்கள் அறிவிக்கின்றன.
இறைவனின் அலைவரிசை
பட்டாம்பூச்சிகளின் இதயத்திற்கு
சுவாசங்களை விற்கின்றது.
பாழடைந்த கரசக்காட்டில்
சிலந்திகளும் மின்மினிகளும்
வாழ்க்கைக் கவிதை வாசிக்க..,
சஹாராவின் மணற்புழுதிகள்
குருடனின் பூந்தோட்டத்தில்
ஆடை நீங்கி நிர்வாணமாகிறது.
வெள்ளை நதி கொக்குகள்
மீன்களின் ஒப்பாரியில்
மனுக்கள் எழுதுகின்றன
மலருக்கும் காற்றுக்கும்
மணமுடித்த சோலைகள்
பேரக்குழந்தைகளை சருகுகளாய்
தவழவிட்டு வேடிக்கை பார்க்கிறது
குறிஞ்சிப் பூவின் பிரசவத்தில்
பீனிக்ஸ் பறவைகள்
இலவசமான மருத்துவர்கள்..,
வண்டின் தாமர்த்திய
உறவுக்கு அச்சப்பட்டு
மஞ்சள் நிற பூவினங்கள்
பனியெனும் வெண்காட்டில்
மறைமுகமாக வாழ்கிறது...
ஆபிரிக்க மக்களுக்காக
அமுதத்தை தானம் செய்கிறது
செவ்வரத்தைப் பூக்கள்..!
கரை வந்த மீன்களின்
பாடை சுமந்து போகிறது
நூறு நெய்தல் நிலப்பூக்கள்!
மொழிகள் தெரிந்தும்
வினாக்கள் புரிந்தும்
அகிலமெனும் விடுகதைக்கு
விடை சொல்லத் தெரியாமல்
முழிக்கின்றது "ஊமை மலர்கள்"

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (11-Jun-17, 1:46 pm)
பார்வை : 125

மேலே