இன்று ஏனடி

அன்பே
கொஞ்சி கொஞ்சி பேசும்போது
உன் வார்த்தைகள் கொடுத்த உயிரை
இன்று ஏனடி என் எதிரே
நின்று எடுக்கின்றாய்?!,

உணர்வுகளை வெறுத்து நின்றபோது
உலகமே நீ என்று என்னை
தேடிவந்தவள் ஏனடி இன்று
என்னை உதரிவிட்டு போகிறாய்?!!,

ஆறுதல் வேண்டி நிற்க்கும் வேளையில்
ஆயுதம் கொண்டு என்னை
அழிக்க நினைக்கும் அழகியே!
ஏனடி இன்று இன்னும்
என்னை அழிக்காமல் இருக்கின்றாய்,

இமைக்கவே விரும்பாமல்
நான் இருந்தபோது
உன் இருவிழிகள்
என்னை அழைத்ததடி
கதைகள் பேசுவதக்கு!
ஆனால் இன்று ஏனடி
உன்னாள் தோன்றிய என் காயங்கள்
மட்டும் பேசுகின்றது....?????!!!,


துடித்துக் கொண்டு இருக்கும்
என் இதயம் துணிந்து விட்டது
என் உயிரை துறக்க......
இருந்தும் இன்று ஏனடி
நிறுத்த மறுக்கின்றாய்
அன்பு காட்டி நடிப்பதை,

விருப்பம் இல்லையென்றால்
ஒருமுறை உண்மையை
சொல்லி விடடி
என்னை வேண்டாம் என்று!
அதோடு முடிந்து விடுமடு
நம் காதல் வேர்கள் இன்றோடு....
.......................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (12-Jun-17, 7:20 pm)
Tanglish : indru aenadi
பார்வை : 269

மேலே