வீடு மட்டும் இல்ல நாடும்
விவசாயி மகன் : அப்பா பொருளாதார வளர்ச்சி அப்படின்னா என்னப்பா.......?
விவசாயி : ஒரு நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்ணா...
மகன் : அப்ப ஏன்பா நம்ம மட்டும் பொருளாதார வளர்ச்சி அடையாம இருக்கோம்??????.....
விவசாயி : எந்த ஒரு நாடு விவசாத்துல வளர்ச்சி அடையுதோ அந்த நாடு பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடையும் கண்ணா....
மகன் : நம்ம நாட்டுல விவசாயம் எப்படி இருக்கு????
விவசாயி : நம்ம நாட்டுல??? விவசாயம் நடுரோட்டுல இருக்குடா
மகன் : என்ன சொல்றீங்க அப்பா எனக்கு புரியலயேயேயேயேயே....
விவசாயி : விவசாயி எல்லாம் நிலத்துல பயிர் செய்யனும் ஆனானானா.......
மகன் : என்னபா???? ஆனா அப்படின்னு இழுக்குறீங்க....
விவசாயி : அது ஒன்னும் இல்ல கண்ணா நம்ம விவசாயி எல்லாம் நிலத்துக்கு தண்ணீர் கேட்டு நடுரோட்டுல உக்காந்து இருக்காங்கப்பா......
மகன் : அதனால என்னப்பா????
விவசாயி : அது வந்து நம்ம பயிர் வச்சாதானே சாப்புட சோறு கிடைக்கும் , நம்ம வளர முடியும் , நம்ம நாடு வளரும்..............
மகன் : ஆமா பாஆஆஆ நம்ம விவசாயி எல்லாம் ரோட்டுல இருக்குற வரைக்கும் நம்ம வீடு மட்டும் இல்ல நம்ம நாடும் எப்பவுமே வளராதுபா................
.............
சிரிக்க மட்டும் அல்ல
சற்று சிந்திக்கவும்