தேவதை நீ

நீ பிறந்ததிலிருந்தே
தேவதை தான் நிச்சயமாய்
ஆனால் நான் உன்னை
காதலிக்க தொடங்கிய பின்
நீ என் கண்களில்
தேவதைகளின் தேவதையாய்
தெரிய தொடங்கினாய் .

உன் கண்கள் என்னும்
மந்திரக்கோல் என்னை
என்னென்ன செய்கிறது
என் தெரியாமல் சிரித்தபடி
அலைகிறாய் நீ
அடர்ந்த வனாந்தரத்தில்
அலைந்து திரியும்
அழகிய தேவதைகளை போல

அதிகாலை வெளிச்சத்தில்
இட்ட கோலத்தின்
அழகை ரசிக்கிறாய் நீ
அழியாத கோலமாய்
நிற்கும் உன்னழகை
ரசிக்கிறது என் கண்கள்

குளித்திருக்கிறாயோ நீ
உன் கருங்கூந்தல்வழி
கசியும் நீர்த்துளி
உன் அனுமதியில்லாமல்
என் இதயத்தை
நனைத்து விடுகிறது

வாசனை திரவியம்
தேவை இல்லாத
மல்லிகை பூ நீ
கடந்து செல்லும்
ஒவொரு நேரமும்
மூர்ச்சையாகி போகிறது
என் இளமை

மேக்கப் தேவை இல்லாத
மயக்கும் அழகு
மங்கை உனக்கு
மன்மதன் ஆகிவிட
ஆசை வருகிறது
இந்த மனசுக்கு

மஞ்சள் பூசினாயோ
வானம் அழகு தான்
எப்போதும் என்றாலும்
அந்தி வான சிவப்பழகு
சிறப்பல்லவோ அதுபோலத்தான்
இப்போது உன் முகம்

வெண் நிலவுக்குள்
வண்ண நட்சத்திரம்
ஓன்று ஒட்டி கொண்ட
அழகு பொட்டிட்டு
சிரிக்கும் உன் முகம்

தேன்கூட்டுக்குள் மறைந்திருக்கும்
தேனை போலத்தான்
உன் கருகூந்தலுக்குள்
ஒளிந்து கொண்டு
எட்டி பார்க்கும்
ஒற்றை ரோஜாவை
கொஞ்சம் பொறாமையோடுதான்
பார்க்கிறேன்
உன் கன்னத்தில் விழும்
ஒற்றை கூந்தலை தொடவே
ஒற்றை கால் கொக்காய்
நான் தவமிருக்க
அது எளிதாக
கொலு வீற்றிக்கிறதே !!!

எழுதியவர் : நாஞ்சில் யாழினி (14-Jun-17, 6:01 pm)
Tanglish : thevathai nee
பார்வை : 617

மேலே