சுயநலமும், பணமும்

திருடர்களுக்கு புதிய புதிய வழிகள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது பிறரை ஏமாற்றுவதற்கு...

குடிநீர் பஞ்சமென்று ஏதும் ஏற்பட்டதாகக் தெரியவில்லை ஊரில்...
இலவசமாகக் குடிநீர் குழாய்களில் கிடைத்த தண்ணீரும் தற்சமயம் போதவில்லை பேராசை மாந்தர்களின் தாகம் தணிக்க...

ஊர்க்குடிநீர் நிரம்பும் போதே இரவில் திருட்டுத் தனமாக குடிநீர் குழாயைத் திறந்துவிட்டு தண்ணீரை தன்வீட்டிற்குள் நிரப்புவதே வேலையாகக் கொண்ட திருட்டு மக்களே நிரம்பிவழிகிறார்கள் ஊரெங்கும்...
இச்செயலால் காலையில் குடிநீர் பிடிக்கும் மற்றவர்களுக்குத் தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது பஞ்சமென...
மக்களே திருடர்களாக இருப்பதைக் கண்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்களால் முடிந்தவரை ஏமாற்றவும் கற்றுக் கொண்டனர் மக்களை...

குடிநீர் விநியோகத்தைக் குறைத்துவிட்டு வாகனங்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து தெருத்தெருவாய் விற்கின்றனர் ஒரு குடம் தண்ணீர் இரண்டு ரூபாயென...
அதையும் மக்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகிறார்கள்,
கொஞ்சமும் புத்தியில்லா மடையர்களாய்...

இப்படியே ஏமாற்றுக்காரர்களின் ஆதிக்கத்தில் மழை எப்படி பொழியும்?
குடிநீரின்றி சாக வேண்டியதான் பணமில்லாதோர்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Jun-17, 12:24 pm)
பார்வை : 2385

மேலே