எனக்கு ஒரு சந்தேகம்

எனக்கு ஒரு சந்தேகம்
**************************

ரெண்டு வெட்டி பசங்க...
ஊர் ஒதுக்குப்புறமா இருக்குற
வாய்க்கால் பாலத்துல உக்காந்து...
வெட்டியா...
உலகத்துல நடக்குற
ஆச்சர்யமான விஷயத்தை பத்தி
ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்காங்க...!

ஒருத்தன் சொல்றான்...
நேத்து ஒரு வீடியோ பார்த்தேன்...
ஒருத்தனுக்கு
ரெண்டு காலும் கையும் இல்ல...
ஆனா அவன் நம்மள மாதிரியே
எல்லா வேலையையும் பண்ணுறார்...

அதுக்கு அவன் சொல்றான்...
செம... கிரேட்ல...
எனக்குலாம் ஒரு கை உடைஞ்சாலும்
சரியாகுற வரைக்கும் வீட்டுல
பேசாம படுத்துக்குவேன்....

உடனே அவன்
இன்னொருத்தர்...
பத்து பதினைஞ்சி விசப்பாம்பை
கூண்டுல அடைச்சி வச்சி...
அதுக்குள்ளே தைரியமா இருக்காருடா...
பயப்படாம..!!

என்றதும் இவன் சொல்றான்...
உண்மையிலேயே அவரலாம் பாராட்டனும்...!
ஏன்னா...
பாம்ப கண்ட படையே நடுங்க்கும்னு சொல்லுவாங்க...!!
நம்மாலலாம் இத செய்ய முடியாதுப்பா..!!!

உடனே அவன்...
இது பரவாயில்ல...
ஒருத்தன் ஹெலிக்காப்டர்ல இருந்து
அப்படியே ஜாலியா குதிக்கிறான்...
கீழ தண்ணி பளபளன்னு இருக்கு...
அவன் குதிச்சி
தரையில போய் முட்டுற வரைக்கும்
தெளிவா தெரியுது...

என்றதும்... அது வெளிநாடுடா...
அப்படித்தான் தண்ணி இருக்கும்...
நா கோடி ரூபாய் கொடுத்தாலும்
நம்ம ஊர் தண்ணீல குதிக்க மாட்டேம்பா...
தண்ணியா இது சாக்கடை...
இத சுத்தம்பண்ண சொன்ன
நல்ல சரக்க போட்டு ஓப்பி அடிக்காங்க...
இந்தியாவே நாறிப்போய் கிடக்குது...!

என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க...
இவர்கள் வீட்டு சாக்கடைத்தண்ணி
பாலத்துக்கு கீழ ஓடிக்கிட்டு இருக்கு...!!

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...!

நம்மால் முடியாத ஒரு காரியத்தை
ஒருத்தன் துணிந்து பண்ணுனா...
அவன கிரேட்டுன்னு சொல்றோம்...!!

ஆனா சாக்கடையில இறங்கி
சுத்தம் பண்றவரை ச்சீன்னு சொல்றோம்...!!

ஏன்...
நம்மால்...
சாக்கடையில் இறங்க முடியுமா...?

✒இவண்
க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (16-Jun-17, 12:06 am)
பார்வை : 505

மேலே