இனியும் வாழ்வேன்

தெளிவே இல்லாத இதய ஓடையில்
உனைத் தேடி ஓயாமல் நீந்தும் மீனாக என் நினைவுகள்...
பளிங்கு பாறையாக என் கண்களும் உன் முகத்தையே எதிரொளிக்க...
காணாது காத்திருந்த நாட்களுக்கும் சேர்த்து காத்திருக்கும் என் வாழ் நாட்கள்...
பூத்த மலர்களும் உன் வாசனையை மட்டுமே வீசி என் நாசிகளை கொல்கிறது....
சுவாச அறைகள் எங்கும் காதல் வாசனையை நிரப்பி விட்டாயடா...
பார்வை இருந்தும் விழித் திறக்காத பாவையாய்....
கண் மூடியேக் கிடக்க தோன்றிடும் தனிமை நிறைந்த என் உலகம்....
கண்ட கனவுகளை களைத்துத் தொலைத்திட
தூண்டிடும் போராட்டம்....
மனதில் விழுந்த சில பிளவுகளை பூசி மூட நேரம் தேடும் என் காலம்...
விடியாத காலைகளை வெளிச்சத்தோடு எதிர்பார்த்து கிடக்கும் எதிர்காலம்....
சூரிய ஒளிக்கதிர்களை எதிர்நோக்கும் சக்தியை வளர்க்க கடந்து கொண்டிருக்கிறேன் வாழ்க்கையை...
பெண்ணாக பிறந்து வாழ்ந்து நேசித்து மட்டும் மரணிக்க விருப்பம் இல்லை...
எனைச் சுற்றி நான் இட்ட வட்டம் என் சுயமரியாதைக்காக மட்டுமே....
தெளிவாய் இருக்கிறேன் இனி எதற்காகவும் கலங்கக் கூடாது என்று...
உன் மேல் கொண்ட காதல் உனைப் பிரிய மட்டுமல்ல, இன்னும் நம்பிக்கையோடு வாழக் கற்றுத் தந்துக்கொண்டிருக்கிறது....

எழுதியவர் : தமிழ் ப்ரியா (17-Jun-17, 9:32 am)
சேர்த்தது : தமிழ் ப்ரியா
Tanglish : iniyum vaazhven
பார்வை : 249

மேலே