புது விடியல்
இலையில் விழுந்த பனித்துளியாய் இருந்தவள்
இமயத்தில் வீழ்கின்ற நீர்த்துளி ஆனாள்
சிறகைத் தொலைத்தாலும் சிறையில் அடங்காது
சிகரம் தொடவே முயற்சி செய்கிறாள்......
மண்ணில் புதைந்து விட்டேன் என்று
கண்மூடி உறங்காத விதைகள் போலவே
கைகளை இழந்து விட்டப் பெண்மையோ?...
கால்களின் விரல்களால் காவியம் தீட்டுகிறாள்......
மேற்றிசையில் சூரியன் மறைந்து விட்டதே
மேனியை இருழ் சூழ்ந்ததென்று வருந்தாது
கிழக்கில் விழிக்கச் செய்தாள் தூரிகையாலே
விடிந்தது இரவல்ல வாழ்க்கையின் விடியல்.......