இளைஞர்களே, அன்பின் ஞானம் உணருங்களே

உயிர் காக்கப்படலாம் எதிர்த்து நின்ற எதிரியாலே...
உயிர் பறிக்கப்படலாம் உடன்பிறந்த சகோதரராலே...

தமிழனென்றும், மலையாளியென்றும்,
வங்காளியென்றும்,
இந்தியென்றும், ஆப்பிரிக்கனென்றும்,
சிங்களனென்றும்
பல பாகுபாடுகள் மனங்களிலே நிரம்பி வழிவதாலே அகில உலகின் சகோதரத்துவமே மறைந்து புதைந்து விட்டதே அறியாமையாளர்களே...

தூய அன்பைக் காணப்புறப்பட்ட நேரம் எங்கும் காணப்பட்டன அன்பறியாத மனங்களே...

அன்பை உணர, இருதயத்தில் அன்பு நிறைந்திருக்க வேண்டுமென்பதை மறந்து கோபமும், குரோதமும் கொண்டு மூடத்தனமாகிய மாயையில் சிக்கி பேராசைகளால் உந்தப்பட்டு உயிர் குடிக்கும் ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு, தானே அகில உலகில் வல்லவனென போலியான அங்கிகாரத்தையும், அதிகாரத்தையும் தரித்து பாழாகுகின்றீர்களே எனதன்பு சகோதரர்களே...

எங்கும் தூய அன்போடு, அன்பை ஆயுதமாகத் தரித்து, அன்பே உண்மையான அங்கிகாரமாய் அன்பே எங்கும் பரவி அனைத்து உள்ளங்களிலும் நிரம்பி வழிய, துரோகமும், பகைமையும் வேரோடொழிய அகில உலகில் யாவரும் நம்மவர் என்ற சித்தாந்தம் நிலைபெறும் நாள் எந்நாளோ?
அந்நாளை எதிர்நோக்கி அதற்கான சூழல்களை உருவாக்கி, எங்கும் அன்பைப் பரவச் செய்வோம் இளைஞர்களே.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Jun-17, 9:59 pm)
பார்வை : 468

மேலே