தந்தையர் தினம்

அப்பா! நீங்கள் சிந்திய
வேர்வையில் வளர்ந்தவள் நான்...
ஓர் அறிவு உள்ள மரம் கூட
தான் வளர இடம் கொடுத்த
பாறைக்கு குடை பிடித்துத்
தனது நன்றிகளை தெரிவிக்கிறது.
நானோ ஆறு அறிவு உள்ள உயிர்
உங்கள் அன்பிற்கு முன்னாள்
நான் எதை ஈடாகக் கொடுக்க?
என்றும் நன்றியுடன் உங்கள்
அன்பை நினைத்துப் பார்க்கிறேன்!
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

எழுதியவர் : சுமதி (18-Jun-17, 6:50 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : thantaiyar thinam
பார்வை : 245

மேலே