கடல்

தலை காவேரியிலேயே தலைமறைவானாயோ
இறுதி பயணம் என்னுடன்தான் முடியுமெனும் என் தலைக்கனம் தகர்க்க

கபினியிலே கைதுசெய்யப்பட்டாயோ

அணைக்கட்டு ஆயுதத்தால்
வழிப்பறியானாயோ

நடுவர்மன்ற தீர்ப்பைமீறி
பிறந்த இடத்திலேயே பிடிபட்டாயோ

கடைமடையிலேன் தீண்டாமை
கடைபிடிக்கிறாய் !

சம்பா சாகுபடியை சாகும்படி
ஏன் செய்தாய் ?

கொள்ளிடத்தில் சாயக்கழிவால்
கொல்லும்படி செய்ததாலா ?

இல்லை

நீ வரும்பாதையை கொள்ளையடிக்கும் மணல்கொள்ளையை மன்னிப்பதாலா ?

நெற்களஞ்சியங்களை
நெடுநாள் காக்கவைக்காதே
நெடுவாசல் ஆக்கிவிடாதே!

கதிர் அறுக்கும் உழவன் கண்ணை கதிராமங்கலம் நீர் போல் கலங்கடிக்காதே


பூவே உன்மேல் புகார் செய்துகொண்டிருக்கிறேன்
என்னுடன் நீ கலக்கும்
பூம்புகாரிலிருந்து

உமிழ்ந்த உமிழ்நீரளவாவது என்னுடன் வந்து கலந்திடு
நீ என்னுடன் உறவாட அல்ல
பலஜீவன்களின் உயிர்நீரே
நீதான் என்பதற்க்காக

மறித்துபோன மாரிக்காலம்தான்
நம் இருவரையும் பிரித்துப்போனதோ

காத்திருக்கிறேன் வந்துசேர்த்துவிடு
நீவரும் பாதையை வளமாக்கிவிடு .

எழுதியவர் : ரகு (18-Jun-17, 5:56 pm)
சேர்த்தது : ரகு
பார்வை : 232

மேலே