காலநிலை மாறினால்
கோடை வெப்பம் மறைந்து
மழை மேகம் வந்தது
காலநிலை மாறி வருவதால்
மனமும் மண்ணும் நனைகிறது
பள்ளி செல்லும் பிள்ளைகள்
களைப்பிலா ஆட்டம் பாட்டம்
அலுவலகம் செல்பவர் முகத்தில்
ஆனந்தப் புன்னகைத் தாண்டவம்
விட்டகன்ற தாங்கிடா வெப்பத்தால்
மட்டற்ற மகிழ்ச்சி மக்களிடம்
நீண்ட பெருமூச்சு வெளிவருகிறது
வீதியில் வசிக்கும் இதயங்களில்
தொடர்ந்து இயங்கிய குளிர்சாதனம்
தொடங்கியது ஓய்வுக் காலத்தை
வற்றிய நீர்நிலைகள் எதிர்நோக்குது
வரவேற்கத் தயாராகுது மழையை
வறண்ட வயல்வெளிகள் மகிழுது
திரண்டு வருகின்ற மேகத்தால்
விவசாயி வீட்டில் கொண்டாட்டம்
அணைந்த அடுப்பும் எரியுமென்று
காலநிலை மாற்றமே மாற்றுகிறது
காட்சிகளை கணநேரத்தில் பூமியில்
இந்நிலை நிலைத்தால் நிம்மதியே
நடனமாடும் பூரிப்பால் நெஞ்சமும் !
பழனி குமார்
19.07.2017