ஆறாக

ஆறாத
காயங்களால்
ஆறாக
ஓடுதடி
என்கண்ணீர்.....!!

அழுதுகொண்டும்
ஆண்டவனை
தொழுதுகொண்டும்
உன்நினைவில்
என் நிழலும்
தொடருதடி......!!

பேசாமல்
நீ
இருந்தால்
வேரோடு விஷம்
சேர்ந்து
அடியோடு சாயும்
அந்த மரம்போல
நானும்
ஆனேனே......!!

படபடக்கும்
உள்ளத்தில்
பட்டாம்பூச்சி
நீதானே....உன்
எண்ணச்
சிறகுகளில்
வண்ணமும்
நான்தானே.....!!

உயிருக்குள்
உயிர்வாழும்
உன்னதம்
உன்னில்
கண்டேன்.....என்னிடம்
காணாத
கருணையை
உன்னிடத்தில்
தொலைத்துவிட்டேன்.....!!

வெள்ளி நிலவே
தள்ளி நில்லு.....
என்னவள்
அழகில்
உன்னழகு
தொலைந்தே
என்று
புலம்பாதே......!!

எழுதியவர் : thampu (20-Jun-17, 2:33 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 101

மேலே