நம் தாய்பாட்டி மனைவி சமைக்கும்சமைத்த சமையல் --மலரும் நினைவுகள்

அனைவருக்கும் வணக்கம்.

நாம் அனைவரும் நாமே சமைத்தது தவிர மற்றவர்கள் சமைத்ததையும் சாப்பிடுகிறோம். உதாரணமாக பக்கத்து வீட்டுக்காரர்கள் சமைத்தது, ஹோட்டல் சாப்பாடு.

ஆனால் இவை அனைத்திலிருந்தும் அப்பாற்பட்டது நம் தாய் சமைக்கும் சமையல். அதில் அன்பையும் கலந்து ஊட்டுவதால் நமக்கு அது அமிர்தமாகிறது.

அப்படி நமக்காக அம்மா பார்த்து பார்த்து செய்த சமையலில் அனைத்தும் பிடிக்கும் என்றாலும், சில பதார்த்தங்கள் மிகவும் பிடித்ததாக இருக்கும்
1) சின்ன வெங்காய வெத்தக் குழம்பு.
2) வெங்காய காரச் சட்னி.
3) cauli flower வதக்கல்.
4) இட்லி மஞ்சுரியன் (என் குறிப்பில் இருப்பது)
5) வெஜிடபிள் பிரியாணி.

ஆஹா எதை சொல்ல எதை விட
நல்ல பசிக்கும் நேரத்தில் இப்படி ஒரு இழை
என் அம்மா சமைப்பதில் நாங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவது

1)சாம்பார்
2)பாவக்காய் குழம்பு
3)வெண்டக்காய் பொரியல்
4)னூடில்ஸ் & மகரோனி
5)சேமியா பிரியாணி
6)மசாலா பூரி
7)பரோட்டா
8)கத்தரிக்காய் உருளை பொரியல்
9)சிக்கன் ரோஸ்ட்
10)மீன் குழம்பு
11)பஜ்ஜி மற்றும் பருப்பு வடை
12)கோதுமை பாயாசம்
13)கட்லெட்
14)சில்லி கோபி
15)கத்தரிக்காய் வறுவல் மற்றும் உருளை வறுவல்

மேற்கண்ட எதை அம்மா சமைத்தாலும் சரி நாங்கள் சமையல் அறையிலேயே பரிமாறும் வரை சுற்றிக் கொண்டிருப்போம்..என்னதான் பார்த்து சமைத்தாலும் அதே ருசி நமக்கு அமைவதில்லை..
அம்மாவின் திraமை என்பது ரொம்ப ஆடம்பர சமையலாக இல்லாவிட்டாலும் சிம்பிலாக ஓரிரண்டு கறியாயிடும் நல்ல அருமையான காம்பினேஷனாக சமைத்து தருவது தான்



நீங்க சொன்ன மாதிரி அம்மாக்களுடைய சமையலே தனி தான். உதாரணத்துக்கு என் குறிப்பில் இருக்கும் இட்லி மஞ்சுரியனை நான் செய்வதை விட அம்மா செய்தால் சாப்பிட்டுகிட்டே இருப்பேன்.

1. கத்தரிக்காய் கொத்சு
2. கொத்தமல்லி சட்னி
3. கூட்டாஞ்சோறு
4. தேங்காய்ப்பால் பிரியாணி
5. வாழைக்காய் வறுவல்
6. புளிக்காச்சல்
7. அரச்சி வச்ச குழம்பு
8. அவல் உப்மா
இன்னும் சொல்லிக்கிட்டே போலாம்

.
சாம்பார்
மட்டன் பிரியாணி
உருண்டை குழம்பு
இட்லி சாம்பார்
தக்காளி தேங்காய் சட்னி
சேனைகிழங்கு வறுவல்
வத்தல் குழம்பு
அம்மா சமைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனிதான்

எனக்கு பிடித்தது.
முருங்கைக்காய் புளிக்குழம்பு
இரால் எண்ணெய்க்குழம்பு,
வாவல்மீன் குழம்பு,
முருங்கைக்காய், வாழைக்காய், பலாக்கொட்டை சேர்த்த பொரிச்சக்குழம்பு,
இரால், வாழைக்காய் வருவல்,
சொதி,
கெண்டைமீன் குருமா,
பால் கொழுக்கட்டை,
அதிரச மாவு,
வெங்காய குழம்பு......
அம்மாவை விட்டு தள்ளி இருக்கும் கர்ப்பிணி பெண்களின் ஏக்கத்தை ரொம்பவே தூண்டிடீங்க.....

இருந்தாலும் மனசுக்குள் இருந்ததை மற்றவருடன் பகிர்ந்தால் நன்றாக தான் இருக்கும்....அதுவும் அம்மாவை பற்றி என்றால் பேசி கொண்டே இருக்கலாம். அதுவும் கல்யாணம் ஆகி மருமகள், மனைவி மற்றும் அம்மாவாக ஆகிய பின் நம் உற்ற தோழி ரோல் மாடல் எல்லாமே அம்மா தானே.

அம்மாவின் கைவண்ணத்தில் எல்லாமே அழகு ருசி தான் இருந்தாலும் சில உணவை நாம் அதே மாதிரி செய்தாலும் அந்த ருசி வருவதே இல்லை.....அப்படி சில....

தக்காளி சாதம் (ஆல் டைம் பாவோரிட்)
கத்தரிக்காய் சாதம்
பூரி உருளைகிழங்கு
அடை
மட்டன் கிரேவி
மட்டன் கைமா பிறை
முட்டை போரியல்
இட்லி சாம்பார்
தேங்காய் பால் சாதம்
முருங்கக்காய் சாம்பார்
கத்தரிக்காய் மசாலா
கத்தரிக்காய் கொத்சு
உருளைகிழங்கு பிறை
பூண்டு சட்னி
புதின சட்னி

இன்னும் நிறையா இருக்கு.....

அம்மாவின் சமையல் எல்லாமே சூப்பர்.அதில் ஸ்பெஷல் என்றால்
மிக்ஸர்
மைசூர்பா
பூந்தி லட்டு இவை சிற்றுண்டி
சாம்பார்
அவியல்
கூட்டு
அப்பம்
சத்து மா
பொரி மா
இப்படியாக பலபல உணவுகள். நான் ஒவ்வொருநாளும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவர்கள் இவ்வுலகில் இல்லை.என்க்கு சமைக்க தெரியாது. இங்கே வந்துதான் சமைத்து பழகினேன். சமைக்கும் போது அவர்களை நினைத்துக்கொள்வேன். இப்போ அம்மாவின் ஆசீர்வாதம்&அறுசுவையால் மற்றவர்கள் பாராட்டும், பாராட்டுதலும் கிடைக்கிறது.

எழுதியவர் : (20-Jun-17, 5:09 am)
பார்வை : 149

சிறந்த கட்டுரைகள்

மேலே