பள்ளிக் கைதிகள்
காலைக் கண்ணீருடன்
கண் விழிக்கிறது கதிரவன்
கைதிகள் சீருடை அணிந்து
மணியோசைக்கு பயந்து
மழைவேண்டி பிரார்த்தனை செய்து
இன்றாவது இடிந்து விழாதா
என்ற ஏக்கத்தோடு
பள்ளி சென்றனர்
அங்கே நிறைய கற்றுக் கொள்கிறார்கள்
வாழ்வது பற்றி அல்ல
பிழைப்பது பற்றி மட்டுமே
மாலை வந்தபோது
வீடு செல்லும் மகிழ்ச்சியில்
திளைத்தனர்
கதிரவனும் கைதிகளும்
இருந்தும் மனம் முழுதாய்
மகிழவில்லை
காலை வந்தே தீருமல்லவா.,