இவர்கள் கறைகள் விட்டு கரை சேருவது எப்போது

பால் நிறம் தோற்கும்
வெள்ளை வேட்டி
நேர்த்தியான நிறம் கொண்ட
கறைகள் இருபுறம்
இதுதான் கட்சி தோழர்கள்
உடுத்தும் உடை -ஆனால்
இத்தனை தூய்மை
உடையில் இருந்தும்
உள்ளத்தில் அவர்களில் பலர்
சுமப்பது களங்கம்
என்ற கருப்பு கறைகள்
மக்களை கரை சேர்க்க வந்த
இவர்கள் களங்கமில்லா
மனத்தோடு எப்படி
சுயநலத்தை விட்டு
பொது நலத்தில்
மக்கள் நலத்தில்
ஈடு படுவர்? தாமும்
கறைகள் விட்டு கரை சேர்ந்து
காலம் தான் இதற்கு
தரும் தீர்ப்பு..........................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jun-17, 3:19 pm)
பார்வை : 235

மேலே