திரும்பி பார்
மாசு மாசு என்று
முகத்தை
மூடிக்கொள்ளும் மனிதனே
மாசு என்ன இயற்கை
கொடுத்ததா...?
இயற்கையை நீ கெடுத்தது
இயற்கை அன்னைக்கு நீ
இழைத்த கொடுமையின்
மறு உருவமே மாசு
அறிவாயா இதை...
இயற்கை அன்னையின்
மடியில் உண்டு உறங்கி
இளைப்பாருகிறாயே
உன் வாழ்நாளில்
ஒரு மரக்கன்றையாவது
நட்டு வளர்த்தாயா...?
நன்றி மறந்தாயே
ஈன்றெடுத்த அன்னைக்கே
முதியோர் இல்லத்தில் முடிவுரை
கட்டி காக்கும் இயற்கை
அன்னைக்கு நீயா
எழுதுவாய் முகவுரை...
புற மாசுக்கு முகமூடி
உன் அகமாசுக்கு என்ன மூடி...?