என்னை விட்டு விலகிச் சென்றாள்

கண்ணில் காந்தம் வைத்தாள் பின்னல் ஜடை அசைத்து
அன்னமாய் நடந்தாள் மின்னும் கன்னம் வைத்து எந்தன்
எண்ணம் யாவும் மிகைக்கும் வண்ணம் செய்தாள் இந்த
மண்ணில் உள்ளவரை அவள் தானென கிடந்தேன் நான்

பாய்ந்து வந்த வெள்ளமாய் என்னில் கலந்தவளே
காய்ந்த மனதைத் துளிர்த்தவளே தளிர்த்தவளே பெண்ணே
ஆய்ந்து பாராது அன்பு கொண்டேனே ஈற்றில் உயிரை
மாய்க்கும் நிலைக்கு ஆக்கி விட்டு சென்றாயே இது சரியா?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (21-Jun-17, 12:59 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 155

மேலே