எது வாழ்க்கை
உயர்வு தாழ்வு
ஒரு குறையில்லை...
கற்றவர் கல்லாதவர்
என்பது அறிவில்லை...
பாசமும் நேசமும்
குறையவில்லை...
வெற்றி தோழ்வி
என்பது வாழ்க்கையில்லை...
ஜனனம் மரணம்
ஒன்றும் புதிதில்லை...
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே பயணம் செய்கின்றோம்
பயணத்தின் முடிவில்
நித்திரை கொள்கின்றோம்
நித்திரை தான் நியதி என்றாலும்
பயணமே தொடர்கதை...