ஹைக்கூ - 03

நான் அழுது முடித்த பின்
ஆறுதலாய் வருகிறது
ஒரு கவிதை..!

இனிக்கும் இன்னிசை
முகம் சுளிக்க வைக்கிறது
இரைச்சல்..!

இசைக்கும் இரைச்சலுக்கும்
பாட்டுப்போட்டி அரங்கேறுகிறது
நெடுஞ்சாலை..!

மலர்ந்திருக்கும் மலர்கள்
வாடிக்கிடக்கிறது மனம்
முதிர்கன்னி..!

வெற்றி வர வழியில்லை
ஆக்கிரமித்திருக்கிறது
பொறாமை..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (21-Jun-17, 4:48 pm)
பார்வை : 321

மேலே