நொடிப்பொழுதும் பிரியேன்

உயிரில் கலந்துவிட்ட உன்னை
உவமைகளை கொண்டு
எப்படி வடிப்பேன்..!

எதிரில் நீ இல்லாமல் போக
உதிரத்தில் ஓர் அழுகுரல்
ஓயாமல் கேட்கிறதே..!

கடல் கடந்தும்
ஒலித்திடுமா?
கார்மேகமும்
உரைத்திடுமா?

துயில் கொள்ள நேரமிருந்தும்
நின் எழில் முகம் காணாது
பாரமாகிறது என் இரவுகள்..!

இன்பத்தில் திளைத்திட
துன்பத்தில் மலர்ந்திட
அகத்தினை படித்திட வேண்டுமே..!
அன்பைக்கொடுத்திடு போதுமே..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (21-Jun-17, 4:53 pm)
பார்வை : 420

மேலே