உன் காதல் ஒன்றே போதுமடி

வண்ணக்கோலம் ஒன்றை இதய வாசலில்
வரைந்து விட்டு போனாயடி !

எண்ணத்து நினைவெல்லாம் நீ மட்டுமே
நிரம்பி வழிகிறாயடி !

நினைத்ததும் நெருங்கி ஓடி வந்து
நெஞ்சத்தில் குடி புகுந்து விடுகிறாயடி !

உள்ளத்து நினைவெல்லாம் உன்ன மட்டுமே
சுற்றுதடி !

உன் உருவத்தை பார்த்து விட்டால்
உன்னுடனே இருக்க தோணுதடி !

உன் விரல் பிடித்துவிட்டால் வீணையின்
நாதமெல்லாம் கேட்குதடி !

உன் விழி பார்வை என்மேல் பட்டுவிட்டால்
உன் மேல் காதல் விஷம் போல ஏறுதடி !

உன் செல்ல தீண்டலில் தான்
உள்ளமெல்லாம் உருகி உன் காலடியில் ஓடுதடி !

உன் சிங்கார அழகெல்லாம் ரசிக்கையிலே
நான் சித்தபிரம்மை கொண்டவனை போல் ஆகிறேனடி !

உன் மடி படர்ந்து அக்கணமே மரணித்தால்
மரணம் கூட எனக்கு மகிழ்வு தானடி !


மண்ணில் நூறாண்டு வாழ மலர்ப்பெண்ணே
உன் காதல் மட்டுமே போதுமடி !

எழுதியவர் : முபா (22-Jun-17, 4:27 pm)
பார்வை : 278

மேலே