காதலைத் தவிர வேறொன்றுமில்லை

உன்னைத் தவிர
வேறொன்றுமில்லை
என்னிடத்தில்
ஊரும் உறவினர்களும்
பழித்தாயிற்று.

உன்னைக் கைப்பிடிக்கும்
இத்தருணத்தில்
என் காதலை கடுகளவும்
குறைய விடேன்
உன் கண்களில்
துளி கண்ணீரும்
சிந்த விடேன்.

உறக்கத்தை மறந்து
உழைப்பினை உணர்ந்ததால்
உயர உயர வளர்கிறேன்
உன் காதலால்
வலிதனை மறக்கிறேன்.

யார் பழிச்சொல்லையும்
தன்னுள் ஏற்காமல்
வாழ்வில்
ஏற்றத்தைக் காண வேண்டும்
என்ற உன் எண்ணமே
என்னை மேலும்
உயரச் செய்கிறது

வருடங்கள் பல ஆனாலும்
காயங்கள் ஆறினாலும்
ஊரும் உறவினர்களும்
நம்மை மதிக்கச் செய்தது
அன்பே
உன் காதலைத் தவிர
வேறொன்றுமில்லை

எழுதியவர் : Parithi kamaraj (23-Jun-17, 10:10 am)
பார்வை : 195

மேலே