நல்லவர் நட்பு
நல்லோர் சேர்க்கை தெரியாது ,
தீயோர் நட்பாம் நிழலில் வெகு நாள்
வாழ்ந்து, எல்லாம் இழந்தபின் -ஒருவன்
நல்லவர் ஒருவரை காண்கின்றான் ;
அவர் சேர்க்கை இவனை மீண்டும் வாழவைக்க,
அவர் நட்பு பாலைவனத்தில் ஓர் சோலைவனமாய்
தெரிந்தது -நல்லவர் நட்பு இறையன்பு .