புன்னகைக்கும் ஒற்றைப்பூ

பூங்காற்றுத் தவழ்ந்துவரப் புத்துணர்வில் முகம்மலர்ந்து
பொலிவை யூட்டும் !
மாங்குயிலின் தேனிசையும் மனம்மயக்கி இதமளித்து
மகிழ்வைக் கூட்டும் !
தூங்காத நினைவுகளும் சுகமாகக் கிளர்ந்தெழுந்து
சுமையை வோட்டும் !
ஓங்கிவளர் பசுங்கொடியில் ஒற்றைப்பூ புன்னகைக்கும்
உள்ளம் வென்றே !!!

( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( காய் காய் காய் காய் மா தேமா )

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (23-Jun-17, 12:38 pm)
பார்வை : 283

மேலே